User Reviews for Iraivi


must be watched movie....
on

Iraivi-is an awesome movie ...the characters were potrayed very well and all the actors and actress had done justice......the whole crew deserves a standing ovation...
my hearty congratulations to the whole crew and i wish all them success in their future projects
SJ Suryah acting skill has been fully utilised and the director has brought life in all characters....and as usual VIJAY SETHUPATHI with his calm and casual acting has stealed the show,....

3
IRAVI THE NEW PERCEPTION
on

‪#‎IRAIVI‬:
By Karthik Subburaj.
I was a total moron.. and i was starving to attain a perception about FEMINISM.. and i was totally lazy to read books.. and i might say i cannot read a book, since it might be writer's perception.But i am just lazy.. it is the actual reason.
Since i am lazy, i was waiting for a more compromising visual feast to attain a perception over FEMINISM, And i believed that karthik subburaj would never disappoint me. Its the sign that the fabulous art works never misses to attract us.
Whenever i saw the Trailer of IRAIVI.. i told to myself, Its time to learn something about Human kind and Feminism.
All of the fancy words i was using in the past to describe an awesome movie went worthless.. I am searching for new and more intense words to describe this movie #IRAIVI.
The making, The lights, The story line, i cannot call it a classy play.. this is a whole new dimension of the CINEMA strictly by Kathik Subburaj...
And this is the first time in my life, where i saw ‪#‎SJ_SURYA‬ as an different actor, and he is the MASTER PIECE In his category.
Karthik subburaj, the way he gets the art from his actors, EX: Bobby Simha, only karthik subburaj can Bring the Real Actor inside Bobby simha, As of Know..! THAT IS RIGHT. IT IS JUST MY PERCEPEPTION.
This is the First time in the world cinema where all the MEN in the theatre Clapped and applauded for abusing MEN.
Its a Reflex in the theatre.. I dont want to reveal the story line.
But i cannot say that you must watch the movie... If you are interested to watch the movie..
Then Get excited now!.. Its worth it!...
Even 25% of the women who watch the movie might not understand Or feel it as abusive or more disturbing content. But i would definitely not complain about it.. its your own perception , there is nothing wrong in it.. I like them more for it.
Women are the most Fabulous Beings in the whole universe.
I hope definitely there will be huge a difference in my attitude towards women after this "U turn" in my Perception.
Now i have got the More compromising visual evidence, Its time for transformation towards the glorious path.
This movie is nothing like women degrading men, or the converse..
Its out of shit.. Its pure.
‪#‎Manithi_Veliye_VA

2
இறைவி - IRAIVI - வணங்கலாம் ... http://pesalamblogalam.blogspot.in/2016/06/iraivi.html
on

நள்ளிரவில் ஒரு இளம்பெண் நிறைய நகைகள் அணிந்து வீதியில் தனியாக என்று செல்ல முடிகிறதோ அன்றே இந்தியாவிற்கு முழு சுதந்திரம் அடைந்ததாய் ஒத்துக்கொள்வேன் என்றார் மகாத்மா . ஆனால் இன்றும் ஆணாதிக்க சமுதாயத்தில் பட்டப்பகலில் ஒரு பெண் தனது வீட்டில் கூட நிம்மதியாக இருக்க முடியாத சூழலில் தான் நாம் இருக்கிறோம் . ஆண்கள் உலகத்தில் பெண்கள் ஒரு பகுதி ஆனால் அவர்களுக்கு ஆண்கள் தான் உலகமே . இப்படி தனது சுயநலம் , ஈகோ இவற்றால் தன்னை நம்பி வந்த இறைவிகளை கைவிட்ட இரண்டு இறைவைன்களை பற்றிய கதையே கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வந்திருக்கும் இறைவி ...

தயாரிப்பாளருடனான தகராறால் தன் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் பிரபல இயக்குனர் அருள் ( எஸ்.ஜே.சூர்யா ) , ரிலீசுக்கு தேவைப்படும் பணத்துக்காக தனது மூதாதையர் செய்த பூர்வீக சிலைகளை திருடும் அவர் தம்பி ஜகன் ( பாபி சிம்ஹா ) , அவர்களுடைய பால்ய நண்பன் மைக்கேல்
( விஜய் சேதுபதி ) , எஸ்.ஜே.எஸ் சுக்கு மனைவியாக கமாலினி முகர்ஜி , விஜய் சேதுபதியின் மனைவியாக அஞ்சலி இந்த ஐவரோடு சேர்த்து நம்மையும் சிரிக்க , கவலைப்பட , சிந்திக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ...

இயக்குனராக சம்பாதித்த பெயரை முழு நேர நடிகரான பிறகு செலவு செய்தவர் எஸ்.ஜே.சூர்யா . ஆனால் அவருக்குள் இருக்கும் நடிப்புப்பசிக்கு நிச்சயம் நல்ல தீனி இந்த படம் . நல்ல கலைஞனுக்கே உண்டான கர்வம் , படத்தை வெளியிட முடியாத விரக்தி , காதல் மனைவி பிரிந்த சோகம் என எல்லாவற்றையும் இயக்குனராக இருப்பதாலோ என்னவோ மனுஷன் நம் கண் முன்னே நிறுத்துகிறார் . இவரிடம் இந்த அளவு வேலை வாங்கியதுக்காகவே கார்த்திக் சுப்பராஜுக்கு ஒரு சல்யூட் . இறைவி க்குப் பிறகு எஸ்.ஜே.எஸ் வழக்கம் போல வியாபாரி , திருமகன் வகையறா படங்களுக்கு திரும்பி விடாமல் நல்ல கதைகளை தேர்ந்தெடுப்பது உத்தமம் ...

சோலோ ஹீரோவான பிறகும் இது போன்ற கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்கும் விஜய் சேதுபதி க்கு வாழ்த்துக்கள் . குடும்பத்தை பற்றி யோச்கிக்காமல் ஒரு நிமிட உணர்ச்சிவயத்தில் குற்றம் புரிந்து விட்டு உள்ளே போன பல இளைஞர்களை நடிப்பால் நினைவு படுத்துகிறார் . நீண்ட இடைவெளிக்கு பிறகு அஞ்சலிக்கு பேர் சொல்லும் ஒரு படம் . " என்ன அவன் கூட படுத்தேனான்னு கேக்குறியா " என்று ஆவேசப்படும் இடத்தில் தனது அலட்டிக் கொள்ளாத நடிப்பால் மார்க் அள்ளுகிறார் அஞ்சலி . என்ன தான் போல்டாக இருந்தாலும் கடைசியில் கணவனுக்குள் கட்டுப்படுவது யதார்த்தம் ...

அப்பா உட்பட யாருமே பெண்களை ஒழுங்காக நடத்தவில்லை என்று ஆதங்கப்படும் பாபி சிம்ஹா வை இது போன்ற சப்போர்டிங் காஸ்டிங்கில் பார்ப்பது ஆறுதல் . வாயால் பேச வேண்டிய வசனங்களை கமாலினி யின் கண்களே பேசி விடுகிறது . விஜய் சேதுபதியின் நண்பி ?! மலராக வரும் பூஜா போல்ட் அண்ட் பியூடிபுள் . Blessing in Disguise என்று சொல்வார்கள் . அது நடிகர் சங்க பதவியை இழந்ததிலிருந்து நல்ல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ராதாரவிக்கு பொருந்தும் . சந்தோஷ் நாராயணின் பி.ஜி.எம் படத்துக்கு உயிர் கொடுக்கிறது . " கண்ணை காட்டி " பாடல் நன்றாக இருந்தாலும் யதார்த்தமான படத்துக்கு கொஞ்சம் ஆர்டிபீசியலாக படுகிறது ...

முக்கிய கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு `இரண்டரை மணி நேரத்துக்கு மேல் படத்தை போரடிக்காமல் கொண்டு சென்ற விதம் , சின்ன சின்ன ட்விஸ்டுடன் கூடிய திரைக்கதை , சிம்பிள் பட் சார்ப்பான வசனங்கள் , இயல்பாக நடிக்கும் நடிகர்கள் , வசனங்களாக மட்டுமில்லாமல் காட்சிகளாக விரியும் சிம்பாலிக் ஷாட்கள் , மனித உணர்வுகளை கசிக்கிப் பிழியாமல் மேம்போக்காக அதே சமயம் அழுத்தமாகவும் பதியும் விதத்தில் சொன்ன ஸ்டைல் இவற்றால் இறைவி சாதாரண படங்களிலிருந்து தனித்து மேலே நிற்கிறாள் ...

புதுசு என்று புகழ முடியாத கதை , குறிப்பிட்ட ஆடியன்சை டார்க்கெட் செய்து எடுக்கப்பட்டது போன்ற படம் , இயக்குனரின் முந்தைய படங்களை நினைவு படுத்தும் சில சீன்கள் , இறைவி என்று டைட்டில் வைத்து விட்டு பெண்களின் பலத்தை காட்டாமல் ஆண்களின் பலவீனத்தை மட்டும் காட்டிய விதம் இவையெல்லாம் இறைவியை ஒருபடி இறக்குகின்றன . டைட்டில் கார்டில் கே.பி , பாலு மகேந்திரா , சுஜாதா ஆகியோருக்கு நன்றி தெரிவித்த இயக்குனரின் நேர்மைக்கு பாராட்டுகள் . அதே போல மணிரத்னம் , செல்வராகவன் இருவரின் பெயரையும் சேர்த்திருக்கலாமோ என்றே தோன்றுகிறது . வணிக ரீதியான வெற்றியை மட்டும் கணக்கில் வைத்து ஒரே மாதிரியான படங்களை எடுக்காமல் புதுப்புது ட்ராக்கில் பயணிக்கும் கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் வந்திருக்கும் இறைவியை இறுக்கமாக நம்மை ஒன்ற செய்த விதத்துக்காக வணங்கலாம் ...

ரேட்டிங் : 3.5 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 45

1
Nice Message..Good
on

SJ Suriya climax act was awesome

1
AwEsOmE movie...
on

Good msg for all....that is iraivi so all r go to theater and Watch...

1